Archive for the 'எதிர்வினை' Category

ரவி சீனிவாஸ் – க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை – 4

பிப்ரவரி 3, 2009

புதிய ஜனநாயகம் ஜனவரி 2009 இதழில், தோழர் சுடர் எழுதிய கட்டுரைக்கு ரவி சீனிவாஸ் எதிர்வினை புரிந்திருக்கிறார். அதற்கான மறுப்புக் கட்டுரையின் இறுதிப் பகுதி இது. முந்தைய மூன்று பகுதிகள்   

ரவி சீனிவாஸ்க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை – 1 

ரவி சீனிவாஸ்க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை – 2 

ரவி சீனிவாஸ்க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை – 3

ஏகாதிபத்தியத்தின் சதியே பசுமைப் புரட்சியின் உருவாக்கம், என்பதை 3 பகுதிகளிலும் பார்த்தோம். ஆனால், ரவி இதை ஒப்புக் கொள்ளமாட்டார். ஏனெனில் அவரது எண்ணமும், உருவாக்கமுமே பார்ப்பன, பாசிசமாக இருக்கிறது. அதனால்தான் தனது எதிர்வினையில்புதிய ஜனநாயகம் / புதிய கலாச்சாரம் தோழர்களுக்கு, எதுவுமே தெரியாதுதகவல்களை இரவல் வாங்கி, பொய்களை கலந்து எழுதுவதே இவர்களுக்கு வாடிக்கை…’ என்று, கீ போர்டு கூசாமல் அவரால் அடிக்க முடிகிறது.

//தகவல்களை இரவல் வாங்கி பொய்களை கலந்து எழுதும் கும்பலுக்கு பசுமைப் புரட்சியின் வரலாறும் தெரியாது, அதன் விமர்சனத்தின் வரலாறும் தெரியாது.//

ஏன் ரவி, நீங்கள் மட்டும்தான் மெத்த படித்தவர்தோழர்கள் படிக்காதவர்கள்ஆராய்ந்து பார்க்காமல் குருட்டாம் போக்கில் அனைத்தையும் எதிர்ப்பவர்கள் என்று நினைக்கிறீர்களா? தப்பு ரவி. தன்னை மட்டுமே உயர்வாக எண்ணுவதும், மற்றவர்கள் அனைவரும் முட்டாள்கள், பொய்யர்கள், விவரம் அறியாதவர்கள் என எண்ணுவதற்கும் பெயர்தான் பார்ப்பனியம், பாசிசம்.

நீண்டகால செயல் திட்டத்துடன், மக்கள் திரள் அமைப்பைக் கட்டி, அமைத்து புரட்சிக்கு திட்டமிடும் தோழர்கள், ஒன்றும் தெரியாத முட்டாள்களல்ல. எதையும், எவரையும் எடுத்ததுமே நிராகரிப்பவர்களுமல்ல. ஏற்பதற்கு காரணங்களை முன் வைப்பது போலவே, விலக்குவதற்கான காரணங்களையும் பொதுவில் வைத்து உரையாடுபவர்கள்; உரையாட அழைப்பவர்கள். தங்களை மறுபரிசீலனை செய்ய என்றுமே தயங்காதவர்கள். அழித்தொழிப்பு, சாகசவாத செயல்களில் ஈடுபடும் மாவோயிஸ்ட் அமைப்பினரை உரையாட தோழர்கள் அழைத்துக் கொண்டே இருப்பதே அதற்கு சாட்சி.

எதுவும் தெரியாமல், ஆனால், எல்லாம் தெரிந்தது போல் பேசக் கூடாது. பசுமைப் புரட்சியின் வன்முறை குறித்து தோழர்கள் மட்டுமல்ல, ‘ஜனநாயகத்தைநம்புபவர்கள் கூட உரையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், தோழர்களின் உரையாடலுக்கும், ‘ஜனநாயகவாதிகளின்உரையாடலுக்கும் வித்தியாசமிருக்கிறது. அந்த வேறுபாட்டை உணர்ந்தால்தான் தோழர் சுடரின் கட்டுரையை உங்களால் புரிந்து, உணர்ந்து கொள்ள முடியும். உதாரணமாக,

 //பசுமைப்புரட்சியை தமிழ்நாட்டில் மார்க்சிய வட்டாரங்களில் முதலில் விமர்சித்தது எஸ்.என்.நாகராஜன். இந்த விவாதங்கள் 1980களில் பரவலாக துவங்கின, அதிகம் வெளியே தெரிய வந்தன.அதில் முக்கிய பங்கு வகித்தது PPST குழு. நாகராஜன் பார்பனர், PPST குழுவிலும் பலர் பார்பனர்கள். அவர்கள் பசுமைப்புரட்சியை கேள்விக்குள்ளாகியவர்கள்.//

என்று எழுதியிருக்கிறீர்கள். இந்த 5 வாக்கியங்களுக்கு இடையில் சீழ் பிடித்துக் கிடக்கிறது உங்கள் சிந்தனை. நாகராஜன் பார்ப்பனர், PPST குழுவிலும் பலர் பார்ப்பனர்கள் என நீங்கள் ஏன் சுட்டிக் காட்டவேண்டும்? பார்ப்பனர்களுக்கு மட்டுமே சமுதாயசிந்தனை, அக்கறைஇருக்கிறது என சுட்டிக் காட்டவாஅல்லது வேறு எந்தவிஷயமும்கிடைக்காததால் காலம்தோறும் மகஇக தோழர்கள் மீது சுமத்தப்படுகிறதே குற்றச்சாட்டு… ‘பார்ப்பன தலைமைஎன்றுஅதை மனதில் வைத்து, ‘அவாளும் நம்மளவாதான்…’ என பல்லை இளிக்கிறீர்களா? முட்டாள்தனத்துக்கும், புறம்போக்குத்தனத்துக்கும், கடைந்தெடுத்த அயோக்கியத்தனதுக்கும் ஒரு அளவு இருக்கிறது ரவி

முன்பே சொன்னபடி, எஸ். என். நாகராஜன், ‘பாதுகாப்பான, சோம்பல் நிரம்பியபுரட்சிக்கு வித்திட்டவர்! ஒடுக்கப்பட்டவர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும், காலம் காலமாக அடிமையாகவே வைத்திருக்கும் பார்ப்பன வைணவ சித்தாந்தத்தில்(?) மார்க்சியத்தை தரிசித்த கடைந்தெடுத்த பொறுக்கி. அவர், ‘பசுமைப் புரட்சியை எதிர்த்ததையும், தோழர்கள் எதிர்ப்பதையும் ஒன்று என கருதுகிறீர்களா?

முட்டாள். திருவரங்கம் ரங்கநாதர் சன்னிதியில் பாபாசாகேப் அம்பேத்கர் படத்தை வைத்து, வைணவத்தையே, வைணவ சித்தாந்தத்தையே அதிர வைத்த தோழர்களுக்கும், எஸ். என். நாகராஜனுக்கும் வித்தியாசமில்லை? ‘திண்ணை மார்க்சியத்துக்கும்‘; விவசாயிகள்தொழிலாளர்களுடன் ஒன்று கலந்து அமைப்பை கட்டி வரும் நடைமுறை மார்க்சியத்துக்கும்வித்தியாசம் உண்டு. இரண்டும் எதிர் எதிர் துருவங்கள். ஒரு பொறுக்கியுடன், தோழர்களை ஒப்பிட வேண்டாம்.

அப்புறம்,

//1983 ல் கிளாட் ஆல்வரிஸ் இந்த விவாதங்களை அப்போதிருந்த இல்லஸ்டேரட் வீக்லியில் எழுதிய கட்டுரை மூலம் பலர் அறியச் செய்தார்.//

என்று சொல்லியிருக்கிறீர்கள். ‘புதிய ஜனநாயகம்இதழ்களில் தோழர் ஆர். கே. இவரைக் குறித்து எழுதியது இருக்கட்டும். அதை சொன்னாலும் நீங்கள் ஏற்கப் போவதில்லை. அதற்குப் பதிலாக, இவருடன், அதாவது இவரிடம் பணிபுரிந்த, எஸ். வி. ராஜதுரை, இந்த கிளாட் ஆல்வரிஸ் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கிறீர்களா?

”…எனது பாதுகாப்பின் பொருட்டும், கொள்கைச் சமரசம் ஏதும் செய்து கொள்ளாமலும், அந்த (வடாற்காடு – தர்மபுரி பகுதிகளை குறிப்பிடுகிறார் – சூன்யம்) உண்மை அறியும் குழுவில் வந்திருந்த கோவாவைச் சேர்ந்த சமூகவியல் அறிஞரான கிளாட் ஆல்வாரெஸ் வழங்கிய ஆராய்ச்சித்துறை வேலையொன்றை ஏற்றுக் கொண்டேன்….

அந்த ஆராய்ச்சித்துறைப் பணிகளுக்கு வெளிநாட்டு நிதி உதவியும் கிடைத்து வந்ததை அச்சமயம் நான் அறிந்திருக்கவில்லை. அதை அறிந்துகொண்ட பிறகும் நான் அந்த நிறுவனத்தில் பணியாற்றுவதைத் தவறாக கருதவில்லை…”
(அழுத்தம் என்னுடையவை – சூன்யம்) ‘மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்… புலவர் கு. கலியபெருமாள் தன் வரலாறு’; பக்கம்: 31, செந்தீ பதிப்பகம், 80, முதன்மைச் சாலை, பெண்ணாடம் – 606105, திட்டக்குடி வட்டம், கடலூர்.

புரிகிறதா ரவிஇந்தஉண்மையைதோழர்கள் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் பொய், புரட்டு, பித்தலாட்டம், உண்மைக்கு மாறானது என முடிவுக்கு வந்திருப்பீர்கள். ஆனால், ‘பரிமாணம்வழியேநிகழுக்கு வந்த உங்களைப் போன்ற, ஒருதோழர்தான், சக பயணிதான், வெளிநாட்டு நிதி உதவியுடன் ஆராய்ச்சி செய்தவர் கிளாட் ஆல்வரிஸ் என்கிறார்!!

ஏன் ரவி, ஏகாதிபத்தியத்திடமே பணம் வாங்கிக் கொண்டு, அந்த ஏகாதிபத்தியத்தையே கிளாட் ஆல்வரிஸ் எதிர்த்திருப்பார் என்று நினைக்கிறீர்களா? தோழர்களையும் அதையே நம்பச் சொல்கிறீர்களா? ஆமாம், அதுதான் உண்மை என கீ போர்ட் அடித்து நீங்கள் சத்தியம் செய்யக் கூடும். காரணம், ‘வெள்ளைக் காக்கா பறக்கிறது என ஏகாதிபத்தியம் சொன்னால்நீங்களும் அதை நம்புவீர்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால், உங்களுக்கும்(!) படியளப்பவர்கள், அவர்கள்தானே!

சரி, விஷயத்துக்கு வருவோம். கிளாட் ஆல்வரிஸ் எழுதியஅறிவியல் வளர்ச்சி மற்றும் வன்முறை: நவீன மயதாலுக்கு எதிரான எழுச்சிஎன்ற நூலின் 46ம் பக்கத்தில், ‘பசுமைப் புரட்சியின் அரசியலும் பின் விளைவுகளும்என்னும் அத்தியாயம் இருக்கிறது. தோழர் சுடர் சுட்டிக்காட்டியதையேதான் கிளாட் ஆல்வரிஸும் சுட்டிக் காட்டுகிறார். ஆனால், இரண்டுக்கும் பின்னால் இருக்கும் நோக்கங்கள் வேறு வேறு. அது ஏகாதிபத்திய கைக்கூலிக்கும், புரட்சியாளருக்குமான வித்தியாசம்!

அதேபோல் ‘HOMO FABER: Technology and culture in India, China and the west, 1500 to the present Day’ (இந்த நூலின் மூன்றாம் பதிப்பு, Decolonizing History: technology and culture in India, China and the west, 1492 to the present day என்ற தலைப்பில் வெளியானது), மற்றும் ‘The Science, Development and Violence’ நூல்களைக் குறித்து வரிக்கு வரி உரையாட முடியும். அது இந்த எதிர்வினைக்கு அவசியம் இல்லை என நினைக்கிறேன். காரணம், நாம் உரையாடுவது பசுமைப் புரட்சியின் வன்முறை குறித்துதானே தவிர, கிளாட் ஆல்வரிஸ் குறித்து அல்ல.

HOMO FABER: Technology and culture in India, China and the west, 1500 to the present Day’ நூலைக் குறித்து, 1980ம் ஆண்டு டிசம்பர் ‘படிகள்’ இதழில் சிவராமன், ‘ஏகாதிபத்தியத்தின் பிடியில் இந்திய விஞ்ஞானம்’ என்ற தலைப்பில் விமர்சனம் செய்திருக்கிறார். அதையும் தோழர்கள் வாசித்திருக்கிறார்கள் ரவி!

உங்களுக்காக கிளாட் ஆல்வரிஸ் இணையதள முகவரியை தருகிறேன். ‘நேரம்கிடைக்கும்போதுமேய்ச்சல்செய்ய உதவும்!: http://www.typewriterguerilla.com/

பிறகு,

 //நம்மாழ்வாரை பற்றி எழுதியதுடன், இயற்கை வேளாண்மை குறித்து நூல் வெளியிட்டது நிகழ். கோவை ஞானி அதை செய்ய முக்கிய காரணி நாகராஜன். அப்போது புதிய ஜனநாயகம் எத்தனை கட்டுரைகளை இயற்கை வேளாண்மை குறித்து வெளியிட்டது என்பதை சுடர் எழுதுவாரா?//

என பொங்கி வெடித்திருக்கிறீர்கள். அடப் பாவமேஇவ்வளவு அப்பாவியாகவா இருக்கிறீர்கள்? உங்கள்ஆன்மிக குருஎஸ். என். நாகராஜன் சொல்ல, கோவை ஞானி, நம்மாழ்வார்குறித்துநூல் வெளியிட்டபோது, தோழர்கள் களத்தில் இறங்கி விவசாயிகளை பசுமைப் புரட்சிக்கு எதிராக ஒன்று திரட்டி அமைப்புக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். அதாவதுசெயலில்இறங்கியிருந்தார்கள்.

‘மக்கள் கலை இலக்கிய கழகத்துக்கு’ அடுத்தபடியாக கட்டப்பட்ட அமைப்பு ‘விவசாயிகள் விடுதலை முன்னணி’தான். இது மாற்று அமைப்பினருக்கே தெரியும். இதற்கு பிறகுதான் ‘புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, ‘பெண்கள் விடுதலை முன்னணி’, ‘புதிய ஜனநாயக தொழிலாளார் முன்னணி’ (அமைப்புகள் தொடரும் ரவி… வெகுமக்கள் இயக்கம் நிற்காது!) ஆகிய மக்கள் திரள் அமைப்புகள் கட்டப்பட்டன.

இறுதியாக ரவி, ‘புதிய ஜனநாயகம்இதழின் முதலாமாண்டிலிருந்தே, ஏகாதிபத்தியபன்னாட்டு சதிகளுக்கு எதிரான விவசாய தகவல்களும், பசுமைப் புரட்சிக்கு எதிரான வன்முறை குறித்த கட்டுரைகளும் பிரசுரமாகிக் கொண்டுதான் இருந்தன. அவற்றை இங்கு பட்டியலிட ஆரம்பித்தால், பதிவு தாங்காது!

இத்தனைக்கும் அப்போது நீங்கள் கண்காணாத தூரத்திலோ, தொடர்பு எல்லைக்கு அப்பாலோ இல்லை. கோவையில், எஸ். என். நாகராஜனிடம், தீக்ஷை பெற்றுக் கொண்டிருந்தீர்கள்! ‘நிகழில்பல மொழி பெயர்ப்புகளை செய்து வந்தீர்கள்! எனவே உங்கள் தீக்ஷைகாலத்திலிருந்தே செயலில், களத்தில் தோழர்கள் இறங்கியிருந்தார்கள் என்பதை மறக்காதீர்கள்.

அலுப்பாக இருக்கிறது. ‘பசுமைப் புரட்சிசரியே என்று சொல்ல வரும் நீங்கள், ‘உரியதகவல்களை தந்திருந்தாலாவதுகெத்தாகஇருந்திருக்கும். இப்படியா சொதப்புவது? உங்களை இன்னமும்அறிவுஜீவியான வலதுசாரிஎன நம்புவதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள்! (ஆமாம் ரவி, இன்னமும் உங்களை நம்பிட்டு இருக்காங்க?!) அப்படியிருக்கும்போது, கொஞ்சமாவது அதற்கு ஏற்ப தகவல்களை தந்திருக்கலாமே? இப்படியா சாயம் வெளுத்துப் போகும்படி எழுதுவது!

சரி சரிவிட்டுத் தள்ளுங்கள். இப்போதும் ஒன்றும் குடி முழுகி விடவில்லை. எப்போதுமேநேரம்கிடைக்கும்போதுதான் உங்களால் உரையாட வர முடியும். அப்படி உங்களுக்கு கிடைக்கப் போகும் நேரத்துக்காககாத்திருக்கிறோம். அதுவரை எதிர்வினை, மறுப்புக்கு இடைவேளை!

வா ராசா வா.

ரவி சீனிவாஸ் – க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை – 3

பிப்ரவரி 2, 2009

புதிய ஜனநாயகம் ஜனவரி 2009 இதழில் தோழர் சுடர் எழுதிய கட்டுரையை மறுக்கும் ரவிக்கு ஒரு வார்த்தை. 2009 பிப்ரவரி மாத காலச்சுவடுஇதழை அவசியம் படியுங்கள். ஏனெனில் அந்த இதழைத்தான் நீங்கள் ஆதாரப்பூர்வமாக நம்புகிறீர்கள். நீங்கள் சிலாகித்து பேசும் சங்கீதா ஸ்ரீராம், பசுமைப் புரட்சி குறித்து இந்த இதழில் என்ன எழுதியிருக்கிறார் என்று நேரம் கிடைக்கும்போது‘, ‘மேய்ந்துவிட்டு வாருங்கள்.

நீங்கள் சொல்லும் ‘குமரப்பா’ என்ன சொல்லியிருக்கிறார் என படியுங்கள்; மகிழுங்கள்!

முதல் இரண்டு பகுதிகள்:

ரவி சீனிவாஸ்க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை – 1

ரவி சீனிவாஸ்க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை – 2

இனி, 3ம் பகுதி: 

பசுமைப் புரட்சியின் பிறப்பு அல்லது அமெரிக்க கைக்கூலி எம்.எஸ். சுவாமிநாதனின் உருவாக்கம் 
பசுமைப் புரட்சியின் உருவாக்கத்தில் பங்கு வகித்த அறிவியல்அரசு கூட்டு 1940களில் இருந்தே தொடங்குகிறது. அப்போது மெக்சிகோவின் தூதுவராக இருந்த டேனியல்சீமும், அமெரிக்க துணை அதிபராக இருந்த ஹென்றி வால்சும் இணைந்து, மெக்சிகோவில் வேளாண்மைத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவி புரிய ஓர் அறிவியல் தூதுக் குழுவை நியமித்தனர். மெக்சிகோ அரசு மற்றும் ராக்பெல்லர் நிறுவன கூட்டு முயற்சியாக, மெக்சிகோ வேளாண்மை அமைச்சகத்தின் ஒரு பகுதியாக சிறப்புக் கல்வி அலுவலகம் 1943ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  1950களில் நார்மன் போர்லாக் ஓரளவு குட்டையான உயர் விளைச்சல் கோதுமை ரகத்தை உருவாக்கியபோது, பசுமைப்புரட்சி பிறந்தது. அற்புத விதைகள்மூலம் அது அதிக உற்பத்தி என்னும் தாரக மந்திரத்தை பரப்பியது.

1960ம் ஆண்டு நார்மன் போர்லாக், ரோமில், .நா. சபை அதிகாரிகள் மற்றும் இதர அறிவியல் அறிஞர்களிடையே பேசும்போது, தான், மெக்சிகோவில், உலகின் பல பகுதிகளிலிருந்தும் வரும் வேளாண்பொருளாதார வல்லுனர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் ஒன்றை நிறுவப் போவதாக குறிப்பிட்டார். உண்மையான மத வழக்கப்படி, நார்மன் போர்லாக் இதை, ‘கோதுமை அடியார்களுக்கான செயல்முறைப் பள்ளிஎன்று அழைத்தார்.

இந்த திட்டத்துக்கு ராக்பெல்லர் நிறுவனம் நிதியளிக்க, உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் சர்வதேச அங்கீகார முத்திரையளிக்க, மெக்சிகோ அரசு இதர வசதிகளை அளித்தது.

ஆப்கானிஸ்தான், சைப்ரஸ், எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஈராக், ஜோர்டான், லிபியா, பாகிஸ்தான், இந்தியா, சிரியா, சவுதி அரேபியா, மற்றும் தென் அமெரிக்காவிலுள்ள 10 நாடுகள் முதலியவற்றிலிருந்து ‘தேர்ந்தெடுக்கப்பட்ட ஏகாதிபத்திய விசுவாசிகள் @ போர்லாக்கின் அடியார்கள் பயிற்சிக்காக வந்தார்கள்.
இப்படி இந்தியாவிலிருந்து போர்லாக்கிடம் பயிற்சி பெற சென்ற ‘அடியார்’தான் எம்.எஸ். சுவாமிநாதன்!  
இவர்களுக்கு முதலில் மெக்சிகோவில் இருந்த ‘சர்வதேச சோளம் மற்றும் கோதுமை மேம்பாட்டு மைய’த்தின் அறிவியலறிஞர்களால், மரபியல் வேளாண் பொருளாதாரம், மண், தாவர வளர்ப்பு ஆகிய துறைகளில் ஓர் ஆண்டுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் தங்கள் சொந்த நிலங்களில் இந்தப் புதிய வேளாண்மையை ‘பரப்ப’ அனுப்பப்பட்டனர்.

இதனை தொடர்ந்து 1963 – 64ல் தனது ‘ஆன்மிக குரு’வான போர்லாக்கை இந்தியாவுக்கு வரவழைத்தார் எம்.எஸ். சுவாமிநாதன். அப்படி வந்த போர்லாக், ‘சந்திக்க’ வேண்டியவர்களை சந்தித்துவிட்டு, ‘வீர உரை’களையும் நிகழ்த்திவிட்டு சென்றார். சென்றதுமே இந்தியாவில் ஆய்வு செய்வதற்காக, ஓரளவு குட்டையான 400 கிலோ பயிர்வகைகளை அனுப்பி வைத்தார்.

நார்மன் போர்லாக்கின் விசுவாசம் + திறமைக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் 1970ம் ஆண்டு, ‘சத்துணவை பொறுத்தவரை ஒரு புதிய உலக சூழலுக்கு’ வித்திட்டதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது!!!

இந்திய விவசாயிகளை கொத்தடிமையாக மாற்றியதில் சி. சுப்பிரமணியத்தின் ‘பங்கு!’ 
 போர்ட் நிறுவனம் 1952ம் ஆண்டிலிருந்தே இந்திய வேளாண்மைத் தளத்தில் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளது என்பதை சென்ற பகுதியில் பார்த்தோம். அப்படி 1958ம் ஆண்டு ராக்பெல்லர் நிறுவனத்தின் கள இயக்குநரான ரால்ப் கம்மிங்ஸ் இந்திய வேளாண் தளத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டார்.

போர்லாக் அனுப்பிய பயிர் வகைகளை கொண்டு போதுமான ஆய்வுகளை நிகழ்த்திவிட்டதாக உணர்ந்த ரால்ப் கம்மிங்ஸ், இந்தியாவில் இதை ‘பெரிய அளவில்’ அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். இதற்காக அப்போதைய இந்திய வேளாண் அமைச்சரான சி. சுப்பிரமணியத்தை அணுகினார். சி. சு.வுக்கு கம்மிங்ஸின் ‘ஆலோசனைகள்’ பிடித்திருந்தன. இந்தியாவில் பசுமைப் புரட்சியை அறிமுகப்படுத்த சி. சு. ஒப்புக் கொண்டார்.

ஆனால், பொருளாதார வல்லுநர்களான பி.எஸ். மின்ஹாசீம், டிஸ். சீனிவாஸ் ஆகியோர் இந்தக் கொள்கையை எதிர்த்தனர்.

1966ம் ஆண்டு வந்த பெரும் வறட்சி இந்திய உணாவு உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்தச் சமயத்தில் அமெரிக்காவில் இருந்து முன் எப்போதும் இல்லாத வகையில் உணவு தானியங்கள் வந்து இறங்கின. இது உணவுச் சார்பு, புதிய கொள்கை வடிவமைக்கப்பட வழி வகுத்தது.

அப்போது அமெரிக்க அதிபராக இருந்த லிண்டன் ஜான்சன், குறுகியகால அடிப்படையில் கோதுமையை அனுப்பி வைத்தார்.

ஆனால், இந்திய வேளாண்மை அசைச்சரான சி. சுப்பிரமணியத்துக்கும், அமெரிக்க வேளாண்மைச் செயலாளர் ஆர்வில் பிரிமேனுக்கும் இடையே பசுமைப் புரட்சி உடன்படிக்கை கையெழுத்தாகும் வரை, அமெரிக்க அதிபர் ஒரு மாத காலத்துக்கு மேல் உணவு மானியம் அளிப்பது குறித்து எந்தவிதமான உறுதி மொழியையும் அளிக்க மறுத்துவிட்டார் என்பதை நினைவில் கொள்க!

1965ம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி இதற்கு இசையவில்லை. அவர்திடீரெனமறைந்த பிறகே உடன்படிக்கை, இந்திய திட்டக் குழுவின் முன் அனுமதிபெறாமல் கையெழுத்தானது!!
அதாவது, அனுமதி பெறாமல், சட்டத்தை மீறி சி.சுப்பிரமணியம் நம் நாட்டு விவசாயிகளை ஏகாதிபத்தியத்துக்கு கொத்தடிமைகளாக விற்றுவிட்டார். 
தொடரும்

இதன் இறுதிப் பகுதி நாளை வெளியாகும். அதில், ரவி சீனிவாஸ் குறிப்பிட்டுள்ள,

//1983ல் கிளாட் ஆல்வரிஸ் இந்த விவாதங்களை அப்போதிருந்த இல்லஸ்டேரட் வீக்லியில் எழுதிய கட்டுரை மூலம் பலர் அறியச் செய்தார்.//

கிளாட் ஆல்வரிஸ் பற்றி எழுதுவதாக இருக்கிறேன். காரணம், எஸ். வி. ராஜதுரையும் இதில், இந்த கிளாட் ஆல்வரிஸுடன் சம்மந்தப்பட்டிருக்கிறார்! இதைக் குறித்து ‘புதிய ஜனநாயகம்’ 3ம் ஆண்டு இதழ்களிலேயே தோழர் ஆர். கே. விரிவாக எழுதியிருக்கிறார்!!!

ரவி சீனிவாஸ் – க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை – 2

ஜனவரி 31, 2009

இரண்டாம் பகுதியை ஆரம்பிப்பதற்கு முன், ரவி, ஒரு வார்த்தை.

போன பதிவில், ஆசிய வேளாண்மை குறித்து எழுதியிருந்தேன். அதற்கும் நீங்கள் குருகுலவாசத்தில் கற்ற ஆசிய வேளாண்மை குறித்த பார்வைக்கும் வித்தியாசம் உண்டு. காரணம், நீங்கள்பரிமாணம்வழியாகநிகழ்காலத்தில் இருந்தவர்! பீடாதிபதியாக இருந்து உங்களுக்கு மார்க்சியம்கற்றுத் தந்தஎஸ். என். நாகராசன், சொல்லும் ஆசிய உற்பத்தி முறை வேறு. பதிவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள ஆசிய உற்பத்தி முறை வேறு. இரண்டையும் போட்டு குழப்பி உரையாட வராதீர்கள்.

‘ஆசிய உற்பத்தி முறையா! – சோசலிசமா? வரலாற்றில் எது சாத்தியம்?’ (‘நிகழ்’ 21, மார்ச்’ 92, ‘மார்க்சியம் – கிழக்கும் மேற்கும், பக்கம்: 56 – 61) என உச்சிக் குடுமி அசைய எஸ். என். நாகராசன் கேட்பதற்கும், முதல் பகுதியில் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதற்கும் உள்ள வேறுபாட்டை அவசியம் தோழர்கள் உணர வேண்டும். இல்லாவிட்டால், ‘வைணவத்தில் மார்க்சிய சித்தாந்தத்தை’ தரிசித்த எஸ். என். நாகராசன் பரம்பரையை சேர்ந்த ரவி சீனிவாஸ் வந்தடைந்த ‘இந்துத்துவா மார்க்சிய’த்துக்கு நம்மையும் அறியாமல் நாமும் வந்தடைவோம்!

ஏதோ பயம் காட்டுவதாக நினைத்துவிடாதீர்கள். இந்த எஸ். என். நாகராசன் இருக்கிறாரேஅடேங்கப்பா சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். உடம்பெல்லாம் விஷம். தனிப் பதிவாக இவரை குறித்து எழுதும் எண்ணம் இருக்கிறது. அரைகுறை மார்க்சிய அறிவுடன், ஸோ கால்ட் அறிவுஜீவி பரம்பரையை தமிழ் சிறுபத்திரிகை சூழலில் உருவாக்கிய பெருமை இவருக்கு மட்டுமே உண்டு! இயக்கம், கட்சி என்றெல்லாம் இருக்க வேண்டாம். அது அவசியமில்லை. தனியாக நாம் செயல்படலாம். எழுதி எழுதி அறிவை மட்டுமல்ல, புரட்சியையும் வரவழைக்கலாம்என்பதானபாதுகாப்பானபுரட்சிக்கு வித்திட்ட பிதாமகர் இவர்தான். இவரிடம், வாய் போத்திஇளைய மார்க்ஸைஅறிந்துக் கொண்ட எஸ். வி. ராஜதுரை, தத்தகாபித்தகா என்று எழுதியஅந்நியமாதல்நூலை காரணமில்லாமலா, ‘க்ரியாராமகிருஷ்ணன் வெளியிட்டார்?

இப்படி சிறப்புவாய்ந்த இந்த எஸ். என். நாகராசனிடம்தான் தன் மகன் கண்ணனை மார்க்சியம்கற்கசுந்தர ராமசாமி அனுப்பினார். அட பொய்யில்லை ஸ்வாமி! சத்தியமான உண்மை இது.

தொழிற்கல்வியை முடித்துவிட்டு, இலக்கிய மானேஜராக, ஒன் மேன் இலக்கிய தாதாவாக (ஆர்மி?!) அமர முயன்ற கண்ணனுக்கு, அதென்ன பொடலங்கா மார்க்சியம்? என்ற கேள்வி திடீரென எழுந்தது. ‘அம்பி, சரியான கேள்வி கேட்டுட்டடாகவலையேப்படாதநம்மாள் நோக்கு மார்க்சிய சித்தாந்தத்தை சரியா சொல்லித் தருவா…’ என உச்சி (குடுமி) மோந்து வேலூர் காந்தி நகரில் (காட்பாடிக்கு அருகில்) இருந்த எஸ். என். நாகராசனிடம் அனுப்பி வைத்தார்.

கண்ணனும் அவருடனேயே தங்கி, (வேஷ்டி, சட்டைகளை துவைத்துப் போட்டாரா என்று தெரியவில்லை!) மார்க்சியம்கற்றார்!’

எஸ். என். நாகராசன் உபன்யாசம் செய்யச் செய்ய அதை கண்ணன், ஆடியோ கேசட்டில் பதிவு செய்தார். முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் வழியில் கிட்டத்தட்ட 20க்கும் அதிகமான கேசட்டுகள் நிரம்பின! எப்போது வேண்டுமானாலும் இந்த உபன்யாச ஆடியோ கேசட்டுகள், சிடி உருவில் காலச்சுவடுசார்பாக விற்பனைக்கு வரலாம்! அப்படி வரவேண்டும் என்பதுதான் ஆசை. அப்போதுதான் தோழர் மருதையன், தோழர்சூரியன்உட்பட முன்னணி தோழர்களை பேச வைத்து நாமும் மார்க்சிய சிடிகளை வெளியிட முடியும்!

இப்படியாக ஊன் உறக்கமில்லாமல் கண்ணன்கற்றமார்க்சியத்தைதான் இப்போதுகாலச்சுவடுஇதழ்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

சரி, எங்கோ ஆரம்பித்து, எங்கோ வந்துவிட்டோம்.

முதல் பகுதி :

ரவி சீனிவாஸ் – க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை – 1

இனி 2வது பகுதி –

மெரிக்காவுக்கு ஏன் திடீரென வேளாண்மை மீது ஆர்வம் வரவேண்டும்?

காரணம், சென்ற பதிவின் இறுதியில் சொன்னபடி தோழர் மாசேதுங் மீது இருந்த பயம்தான். முதல் உலகப் போருக்கும், இரண்டாம் உலகப் போருக்கும் இடைப்பட்ட காலத்தில் சீனத்தில் விவசாயிகளை ஒன்றிணைத்து தோழர் மாசேதுங் எழுப்பி வந்த விவசாயிகளின் இயக்கங்கள் குறித்த தாக்கம் ஆசிய நாடுகள் எங்கும் ஒரு உத்வேகத்தை அளித்தன. வேளாண்மையை அடிப்படையாக கொண்ட ஆசிய நிலப்பரப்பில் தோழர் மாசேதுங்கின் வழிமுறை ஒரு புதிய வெளிச்சத்தை அளித்தது.

1927ம் ஆண்டு, மார்ச் மாதம் தோழர் மாசேதுங் வெளியிடப்பட்ட ஹுனான் விவசாயி இயக்கப் பரிசீலனை பற்றிய அறிக்கை நினைவுக்கு வருகிறதா?

இரண்டாம் உலகப் போருக்குப் பின், இங்கிலாந்தை போலவே தானும் ஆசிய நாடுகளில் கொள்ளையடிக்க வேண்டும் என அமெரிக்கா விரும்பியது. இங்கிலாந்து அரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலனி நாடுகளுக்குசுதந்திரம்அளிக்கும்படி நெருக்கியது. வேறு வழியில்லாமல், பிரிட்டனும் அதற்கு ஒப்புக் கொண்டது 

இப்படி சுதந்திரமடைந்தஆசிய நாடுகள், அதிகரித்து வந்த விவசாய போராட்டங்களை எதிர்கொள்ள நேரிட்டது. இந்த நேரத்தில்தான் சீனாவில் கம்யூனிச கட்சி ஆட்சிக்கு வந்தது. உள்ளூர் விவசாயச் சங்கங்கள், நிலங்களை ஆக்ரமித்துக் கொள்ளவும், கடன்களை தள்ளுபடி செய்யவும் , சொத்துக்களை மறு விநியோகம் செய்யவும் சீன அரசு ஊக்குவித்தது.
இந்த சீன அனுபவம் ஆசிய நாடுகள் முழுக்க உற்சாக ஊற்றை வரவழைத்தது. விவசாய இயக்கங்கள், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, மலேசியா, வியட்நாம் மற்றும் இந்தியாவில் பரவத் தொடங்கின.
மேலே குறிப்பிட்ட ஆசிய நாடுகளில் புதிதாக தலைமையேற்றிருந்த அரசியல் தலைவர்கள், இத்தகைய விவசாய போராட்டங்களை ஒடுக்கி, அரசியல் நிலையை அமைதிப்படுத்த வழிகளை கண்டுப்பிடிக்க வேண்டியிருந்தது. முக்கியமாக கிராமப் பகுதிகளில் நிலவியஅபாயகரமானசூழ்நிலையை சீர்செய்வது முக்கிய அஜண்டாவாக இருந்தது.
அதனால்தான் இந்திய அரசின் உத்தரவுப்படி 1950ல் பெரும்பாலான இந்திய மாநிலங்கள், ஜமீந்தாரி முறை ஒழிப்பு, குத்தகைகாரர்களுக்கு பாதுகாப்பு, நியாயமான கூலி நிர்ணயம் போன்ற வடிவங்களில் நிலச்சீர்திருத்தத்தை கொண்டுவந்தன. சில உச்சவரம்புகளும் கொண்டுவரப்பட்டன.
இதே காலகட்டத்தில்தான் சத்தமில்லாமல் அமெரிக்காவில் வேளாண்மை உற்பத்தி மற்றும் வேளாண்மை அமைதி குறித்த 2வது செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு வந்தது. ‘சீனாவில் ஏற்பட்ட மாற்றம்இந்த செயல் திட்டத்தை இன்னும் வேகப்படுத்தியது.
அதாவதுஅரசியல்தலையீட்டிற்கான ஒரு புதிய தலைமுறைக்காக அமெரிக்க நிதி நிறுவனங்கள், ராக்பெல்லர், போர்ட் நிறுவனங்கள், மற்றும் உலக வங்கி போன்றவை தங்களை தயாரித்துக் கொண்டன.
கிராமப்புறத்தை அரசியல் ரீதியாக நிலைப்படுத்துவது முக்கியமான நோக்கமாக இருந்தது. விவசாய சமுதாயம் முளைவிடும் புரட்சித்தன்மையுடன் விளங்கியதால், அது நெருக்கப்படும்போது, புதிய முதலாளித்துவ ஆதிக்கம் செலுத்தும் புதிய அரசுகளுக்கு எதிராக போராட்டம் கொடுக்கத் தயங்காது என்பது சர்வதேச ரீதியாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. இந்த புரிந்து கொள்ளல், புதிய ஆசிய அரசுகள் கம்யூனிஸ ஈர்ப்பிலிருந்து பிரித்து இழுக்க, கிராமப்புறங்களை முன்னேற்றுவதை குறிக்கோளாக கொண்டிருந்த, அமெரிக்காவால் அறிமுகப்படுத்தப்பட்ட, 1952ம் ஆண்டு கொழும்புத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளத் தூண்டின. கிராமப்புறங்களை நிலப்படுத்தும் வழிமுறைகளாக அந்நிய மூலதனத்தால் அரவணைக்கப்படும் கிராம முன்னேற்றத் திட்டங்கள் பரிந்துரை செய்யப்பட்டன…” என்கிறார்கள் ராபர்ட் ஆந்தர்சன் மற்றும் பேக்கர் மோரிசன்.
அதாவது ரவி, உணவு உற்பத்தியை அதிகரித்து, அதன் மூலம் விவசாயப் போராட்டத்தை மழுங்கச் செய்வதற்கான ஆயுதமாக உருவாக்கப்பட்ட பசுமைப் புரட்சி திட்டத்தில் அறிவியலும், அரசியலும் கலப்புமணம் புரிந்து கொண்டன!

ஆனால், அமெரிக்க வேளாண்மை பார்வை இயற்கையோடு கூட்டுறவு வைத்துக் கொள்ளும் அடிப்படையில் அமையவில்லை. பதிலாக இயற்கையை வெற்றிக் கொள்ளும் அடிப்படையில் அமைந்திருந்தது. அதாவது கடன் அதிகரிப்பு, வேதியியல் உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் போன்ற வெளியில் இருந்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களின் உபயோக அதிகரிப்பின் அடிப்படையில் அமைந்திருந்தது.

இது தங்களுடைய அரசியல் முன்னுரிமைகள் மற்றும் நலன்களை பேணிக் காக்க உதவுவதால் இந்திய ஆளும் வர்க்கமாக இருந்த மேல் வகுப்பினரில் பெரும்பாலோர் இந்த வழிமுறைக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். காரணம், நிலத்தில் இறங்கி அவர்கள் யாரும் வேலை செய்ததில்லை!

ஆனால், அமெரிக்க பாணி வேளாண்மை அமெரிக்காவிலேயே சரியாக பிரபலமாகவில்லை என்பதுதான் உண்மை. செயற்கை உரங்களின் அதிகமான உபயோகம், ஓரினப் பயிர்களை அதிகமாக பயன்படுத்தல், வேகமான, மிகையான இயந்திரமயப்படுத்தல் ஆகியவை 30 ஆண்டுகளுக்குள்ளாகவே அமெரிக்காவின் வளமான சமவெளிகளை பாலைவனமாக்கிவிட்டன.

1930ல் அமெரிக்காவில் தோன்றிய பெரும் பஞ்சம் பெருமளவில் அமெரிக்க வேளாண்மை புரட்சியின் விளைவாக ஏற்பட்டதுதான் என்கிறார் ஹைமேன். ஆனால், இந்தத் தகவல்கள் உலகின் பிற பகுதிகளுக்கு சென்றபோது ராக்பெல்லர் நிறுவனத்தின் பார்வைக்கு சென்று, கவனமாக பரிசீலிக்கப்பட்ட பின்பே அனுப்பப்பட்டன.

இந்த விவரங்கள் அனைத்தும் இந்தியாவில் மூடி மறைக்கப்பட்டது. இவ்வளவு கொடூரமான இந்த அமெரிக்க மாதிரியை இந்தியாவுக்கு மாற்றியமைப்பதில் மூன்று பன்னாட்டு குழுக்கள் ஈடுபட்டன. அவை:

1. தனியார் அமெரிக்க நிறுவனத்தினர் (போர்ட், ராக்பெல்லர்)

2. அமெரிக்க அரசு

3. உலக வங்கி

போர்ட் நிறுவனம், 1952ம் ஆண்டு முதலே இந்திய வேளாண்மைத் தளத்தில் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளது. 1905ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய வேளாண்மை ஆய்வு நிறுவனம், 1958ம் ஆண்டு மறுசீரமைக்கப்பட்டது. ராக்பெல்லர் நிறுவனத்தின் கள இயக்குநரான ரால்ப் கம்மிங்ஸ், இந்திய வேளாண்மை ஆய்வு நிறுவனத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டார். 1960ம் ஆண்டு பதவிக்கு வந்த ஏ. பி. ஜோஷியை அடுத்து 1965ம் ஆண்டு எம். எஸ். சுவாமிநாதன் இந்தப் பதவிக்கு வந்தார்.

எம். எஸ். சுவாமிநாதனை குறித்து பார்ப்பதற்கு முன், இந்தியாவில் போர்ட் மற்றும் ராக்பெல்லர் நிறுவனத்தின் பங்கை குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.

போர்ட்  1952ம் ஆண்டு இந்தியாவிலுள்ள சுமார் 100 கிராமங்கள் அடங்கிய 15 சமுதாய மேம்பாடுத் திட்டங்களுக்கு போர்ட் நிறுவனம் நிதியுதவி அளித்தது. ஆனால், 1959ம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்த 13 அமெரிக்க வேளாண் அறிஞர்கள் அடங்கிய போர்ட் நிறுவனத்தின் குழு, இந்தியாவிலுள்ள 5 லட்சத்து 50 ஆயிரம் கிராமங்களிலும் ஒரே சமயத்தில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியாது என பரிந்துரை செய்ததை அடுத்து இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

இதற்கு பதிலாக குறிப்பிட்ட சில பகுதிகளை எடுத்துக் கொண்டு அங்கு தீவிரமாக இந்த அமெரிக்க வேளாண்மை கொள்கையை நடைமுறைப்படுத்தலாம் என்று அந்தக் குழு பரிந்துரை செய்தது. இதனை அடுத்து 1960 – 61ம் ஆண்டு தீவிர வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (IADP) அறிமுகப்படுத்தப்பட்டது.

ராக்பெல்லர்  ராக்பெல்லர் நிறுவனம், இந்திய ஆய்வு நிறுவனங்களை மறு சீரமைப்பதற்கு பண உதவி செய்து வந்தது. அத்துடன் அமெரிக்க நிறுவனங்களை சென்று பார்க்க, அங்கு பயிற்சி பெற, இந்தியர்களுக்கு நிதியுதவியும் அளித்தது. 1956க்கும் 1970க்கும் இடையில் அமெரிக்க வேளாண்மை நிறுவனங்களையும், ஆய்வு நிலையங்களையும் சென்று பார்க்க இந்தியத் தலைவர்களுக்கு 90 குறுகியகால நிதியுதவி அளிக்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த நிறுவனத்தின் கீழ், 150 ஆராய்ச்சியாளர்கள் கற்றுத் தேறினர். இந்தக் காலகட்டத்தில் இரண்டாயிரம் இந்தியர்கள் அமெரிக்க வேளாண்மைக் கல்விக் கூடங்களை பார்வையிட அமெரிக்க அரசு நிதியுதவி அளித்தது.

ஏழை நாடுகளில், அதிக மூலதனத்தை வாங்கிக் கொள்ளும் இந்த வேளாண்மை மாதிரியை புகுத்துவதற்கு கடன் அளிக்க உலக வங்கி போன்ற சர்வதேச நிதி அமைப்புகள் முன்வந்தன. 1960களின் மத்தியில் இந்தியா தனது நாணய மதிப்பை 37.5% குறைக்க கட்டாயப்படுத்தப்பட்டது.

இந்திய செயற்கை உரத் தொழிற்துறையில் அந்நிய மூலதனம் அனுமதிக்கப்படுவதற்கான சாதகமான சூழ்நிலைகளை தோற்றுவித்தல், இறக்குமதி கொள்கையை தாராளமயப்படுத்தல், உள்நாட்டு கட்டுப்பாடுகளை முழுவதுமாக நீக்குதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்த உலக வங்கியும், அமெரிக்க மானிய அமைப்புகளும் இந்தியாவை நெருக்கின.

இத்தகைய கொள்கைகளை நடைமுறைப்படுத்த தேவையான அந்நியச் செலாவணிக்கு உலகவங்கி கடன் அளித்தது. 1966 – 71க்கு இடைப்பட்ட ஐந்தாண்டுத்திட்டத்தில் பசுமைப்புரட்சிக்கான அந்நிய செலவாணி ரூ. 1114 கோடியாகும். இது அதற்கு முந்தைய ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண்மைத் துறைக்கு ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகையைப் போல் ஆறு மடங்கு! (ரூ. 191 கோடி)

சரி, அடுத்ததாக சி. சுப்பிரமணியம் எதனால் பசுமைப் புரட்சியை இந்தியாவுக்கு கொண்டு வந்தார் என்று பார்க்கலாமா? அல்லது அமெரிக்க கைக்கூலியாக உருவான எம். எஸ். சுவாமிநாதனின் பின்புலம் குறித்து பார்க்கலாமா?

அட, இரண்டையுமே பார்ப்போமே!

– தொடரும்

 

ரவி சீனிவாஸ் – க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை – 1

ஜனவரி 30, 2009

புதிய ஜனநாயகம்ஜனவரி 2009 இதழில் வெளியான தோழர் சுடர் எழுதிய எம்.எஸ்.சுவாமிநாதன்: வேளாண் விஞ்ஞானியா? அமெரிக்கக் கைக்கூலியாஎன்ற கட்டுரையை கீற்று இணையதளம் வெளியிட்டிருந்தது. (http://keetru.com/literature/essays/sudar.php).

அதற்கு ரவி சீனிவாஸ் ஒரு எதிர்வினை எழுதியிருக்கிறார். அது கீற்றில் வெளியாகியிருக்கிறது. அந்தப் எதிர்வினையை தனது வலைத்தளத்திலும்எம். எஸ். சுவாமிநாதன், பசுமைப்புரட்சிகட்டுரைஎதிர்வினை என்ற தலைப்பில் வெளியிட்டிருகிறார். http://www.ravisrinivas.blogspot.com/

நண்பர்கள், அந்த இரு கட்டுரைகளையும் வாசித்தப் பின் இந்த மறுப்பை படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பல நூல்கள், ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கட்டுரை அமைவதால், நீளம் கருதி இதை பகுதிப் பகுதியாக வெளியிடுகிறேன்.

இந்த மறுப்பு ரவி சீனிவாஸ் என்ற தனி மனிதனுக்காக மட்டுமல்ல. அவரைப் போன்று இருக்கும் அனனத்து வலதுசாரிகளுக்காகவும்தான். இந்திய வேளாண்மை, விவசாயிகளின் நலன், குறித்த புரிதலுக்காகவும்தான். இன்று இணையத்தில் வளைய வரும் பல நண்பர்களுக்கு இந்திய விவசாயிகளின் நிலை தெரியவில்லை… அதாவது தெரிவிக்கப்படவில்லை. பசுமைப் புரட்சி என்ற பெயரால் அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்த மோசடி கொஞ்சம் நஞ்சமல்ல. ரத்தத்தை உறைய வைக்கும் அந்த சரித்திரத்தை அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டும்.

விவசாயிகளின் இப்போதைய வறுமை நிலைக்கு யார் காரணம்? கொத்துக் கொத்தாக தற்கொலை செய்து கொள்ளும் நிலமைக்கு அவர்களை தள்ளியது யார்? விவசாய நிலங்கள் நச்சுத்தன்மையுடன் பயனற்று போனதற்கு எது காரணம்… என முடிந்தளவு இந்தக் கட்டுரையில் ஆராய்ந்திருக்கிறேன்.  

பதிவாக, இதை பகிர்ந்துக் கொள்ள காரணமிருகிறது. இந்த நீண்ட நெடிய வரலாற்று பின்னணியை புரிந்து கொண்டால்தான், நக்சல்பாரிகளின் தேவையை, அவசியத்தை உணர முடியும். இந்தியா சுதந்திரம் அடைந்ததாக சொல்லப்படும் காலத்தில் இருந்த கம்யூனிஸ கட்சிகளின் தலைமை விவசாயிகளுக்கு இழைத்த துரோகமும் இதனுள் அடங்கி இருக்கிறது. எம். எஸ். சுவாமிநாதன், போன்ற புறம்போக்கு கழிசடை, அமெரிக்க கைக்கூலிகளின் உருவாக்கமும் இதே வரலாற்றில்தான் புதைந்திருக்கிறது.

உணர்ச்சி வசப்பட்டு ரவி குறிப்பிட்டுள்ளார் பாருங்கள்…

// பசுமைப்புரட்சிக்கு எதிர்ப்பு வந்த போது அதை வலியுறுத்தி ஆதரித்தவர் அன்றைக்கு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம். அவரும் அமெரிக்க கைக்கூலியா.//

கைக்கூலி அல்ல ரவி… இந்திய விவசாயிகளை அமெரிக்காவுக்கு கொத்தடிமையாக விற்ற ‘தலைவர்’தான் சி. சுப்பிரமணியம்.  இந்திய பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி, பசுமைப் புரட்சி இந்தியாவில் வருவதை தடுத்தார். அதனைத் தொடர்ந்து அவர் ‘திடீரென’ மறைந்துவிடவே, அவசர அவசரமாக எம்.எஸ். சுவாமிநாதன், சீ… மன்னிக்க, சி. சுப்பிரமணியம், துணையுடன் பசுமைப் புரட்சியை இந்தியாவின் வேளாண் முறையாக்கினார்.

சரி, பதிவுக்கு வருவோம்.

தகவல் பிழைகளோ, பொருள் பிழையோ இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்.

சூனியம்

ரவி சீனிவாஸ், பொய் சொல்லுவார், உண்மைகளை திரித்து கூறுவார் என்பதற்கு வலுசேர்ப்பது போலவே, அவரது இந்த எதிர்வினையும் அமைந்திருக்கிறது.

உண்மையில் ‘பசுமைப்புரட்சி’ என்பது என்ன, அது எப்போது தோன்றியது, ஏன் உருவானது, யாரால் – எந்த சூழலில் வடிவமைக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்வதற்கு முன், ஆசிய வேளாண்மை என்றால் என்னவென்று பார்த்துவிடுவோம். அதாவது பசுமைப் புரட்சிக்கு முந்தைய காலகட்டம். இதை தெரிந்து கொண்டால்தான் பசுமைப் புரட்சியின் விபரீதத்தை முழுமையாக உணர முடியும்.

இந்திய – ஆசிய வேளாண்மை  ஒரு வேளாண்மை ஆவணம்என்பதுநவீன வேளாண்மையின் தந்தை என்றழைக்கப்படும் சர் ஆல்பிரட் ஹோவர்ட் எழுதியபுகழ்பெற்ற புத்தகம். 1940களில் வெளியான இந்தப் புத்தகத்தில்,

ஆசியாவில் மிகவும் நிலைபெற்றுவிட்ட வேளாண்மை அமைப்பை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இன்று இந்திய, சீன சிறு வயல்களில் நிகழ்ந்து கொண்டிருப்பவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இடம் பெற்றுவிட்டன. கீழ்திசை வேளாண்மை நடைமுறைகள் உச்சகட்ட சோதனையிலும் வெற்றிகரமாக தேறிவிட்டது. பண்டைக் காலத்திய காடுகளைப் போல, புல்வெளிகளைப் போல, வேளாண்மையும் உறுதியாக நிலைபெற்றுவிட்டது..’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஆல்பிரட் ஹோவர்ட் இப்படி சொல்வதற்கு முன்பே, அதாவது 120 ஆண்டுகளுக்கு முன்பே, டாக்டர் ஜான் அகஸ்டஸ் வோல்க்கர் திட்டவட்டமாக ஆசிய – இந்திய வேளாண்மை முறையே சிறந்த முறை என புகழ்ந்திருக்கிறார். இவர் 1889ம் ஆண்டு, இந்திய வேளாண்மையில் வேதியியலைப் புகுத்த, ஆங்கில அரசுக்கு ஆலோசனை வழங்க, இந்திய அரசுக்கான செயலாளராக நியமிக்கப்பட்டவர்.

இங்கிலாந்திலுள்ள ராயல் வேளாண்மை நிறுவனத்துக்கு அளித்த அறிக்கையில் வோல்க்கர் இப்படி குறிப்பிட்டிருக்கிறார்:

இந்திய வேளாண்மை ஒட்டுமொத்தமாக மிகவும் பழமையானது என்றும் பிற்போக்கானது என்றும் கருதுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. பெரும் பகுதிகளில், அதை மேலும் செழுமையடையச் செய்வது தேவையற்ற ஒன்று. இந்திய வேளாண்மையில் மேம்பாடு செய்வதை விட, ஆங்கில வேளாண்மையில் மேம்பாடு செய்ய பரிந்துரை செய்யலாம்.

சாதாரண வேளாண்மை நடைமுறையில், நிலத்தை களைகள் இல்லாமல் வைத்துக் கொள்வதில், தன்னிச்சையான நீர்ப்பாசன முறைகளை பின்பற்றுவதில், மண்வளம் பற்றிய அறிவியல், எப்போது விதைக்க வேண்டும், எப்போது அறுவடை செய்ய வேண்டும் என்பது குறித்த அனுபவத்தில் இந்திய வேளாண்மையை விட சிறந்த ஒன்றை கண்டுபிடிப்பது கடினமான செயல். மாற்றுப் பயிர்முறை, கலப்பு பயிர்முறை ஆகியவை குறித்த அவர்கள் அறிவு அற்புதமானது. இப்படியொரு செம்மையான வேளாண்மை முறையை இதுவரை கண்டதில்லை என அடித்துச் சொல்வேன்..”

என்கிறார் வோல்க்கர். அதனால்தான், உலகப் போருக்கு முன்புவரை ஐரோப்பாவுக்கு கோதுமை ஏற்றுமதி செய்துவந்ததில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது.

”1873ல் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்ட பின்னர், முதன்முதலாக கோதுமை இந்தியாவிலிருந்து வந்தது. இதற்கு காரணம், தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த ஒரு பகுதியிலிருந்து மலிவான விலையில் தொடர்ந்து கோதுமையை பெற பிரிட்டிஷ் வியாபாரிகள் வலியுறுத்தியதுதான். அதனால்தான் தங்கள் பேரரசுக்கு தொடர்ந்து உறுதியான கோதுமை பெற உகந்த இடமாக இந்தியாவை, பிரிட்டன் கருதியது. இதனையடுத்து நூற்றாண்டுகளாக விவசாயிகள் பயிர் செய்து வந்த சிந்து, கங்கை நதிப்பள்ளத்தாக்குகளில் கால்வாய்களையும், இருப்புப்பாதைகளையும் போடுவதில் தொழிற்சாலை பெருமுதலாளிகள் இறங்கினர்…” என்கிறார் பான் போர்கன்.

பல நூற்றாண்டுகளாக விவசாயிகள் தங்களுடைய சொந்த நிலத்தில், தாங்கள் பயிரிட்ட தானியத்தில் இருந்து, சிறந்த விதைகளை தேர்ந்தெடுத்து, பிரித்து, பாதுகாத்து, மீண்டும் விதைத்து, இயற்கை தன் போக்கிலேயே இழந்த உயிர்சத்துக்களை மீண்டும் பெற்றிட அனுமதித்து வந்திருக்கிறார்கள். 

ஒரேவார்த்தையில் சொல்ல வேண்டுமானால், பாரம்பரிய வேளாண்மை முறைகள் கலப்பு மற்றும் மாற்றுப் பயிர் முறைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உதாரணமாக, பயறு வகைகள் பூமிக்கு அளிக்கும் நைட்ரஜன் சத்து, அடுத்ததாக பயிரிடப்படும் தானிய வகைகளின் விளைச்சலுக்கு பெருமளவு உதவியது.

இதற்கு மாற்றானதுதான் பசுமைப் புரட்சி. இது ஒரே மாதிரியான ஓரினப் பயிர்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது….

அதனால்தான் பயங்கரமான பஞ்சம் நிலவிய காலத்திலும் கூட, இந்தியாவெங்கும் ஒவ்வொரு வீட்டிலும் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டன; விதைகள் இல்லாமல் உணவு உற்பத்தி தடைப்பட்டு விடக் கூடாது என்ற நோக்கம்தான் இதற்கு காரணம்.

புரிகிறதா? இப்படி இனாமாக வயல்களில் இருந்து கிடைத்து வந்த விதைகளைத்தான், விலை கொடுத்து வாங்கும் பொருளாக பசுமைப் புரட்சி மாற்றியிருக்கிறது. அதுமட்டுமல்ல, விதைகளை வாங்குவதற்காக ஒவ்வொரு நாடும் சர்வதேசக் கடன்களை பெற வேண்டியிருந்தது; பெற்றே ஆக வேண்டும் என உலகவங்கி நிர்பந்தித்தது.

இதன் தொடர்ச்சியாக விவசாயிகள் விதைகளை பயன்படுத்த வங்கிக்கு படை எடுத்தனர். வேறெதற்கு கடன் வாங்கத்தான். ஆனால், ரவி இதை மறுக்கிறார். இதற்கான பதிலை அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம்…

இப்படி இருந்த இந்திய வேளாண்மை, ஏன் பசுமைப் புரட்சிக்கு சென்றது? இந்தக் கேள்விக்கான விடையை பார்ப்பதற்கு முன், பசுமைப் புரட்சியை எந்த சூழலில் அமெரிக்கா (சந்தேகமே வேண்டாம். அமெரிக்காவின் கண்டுபிடிப்புத்தான் இது) உருவாக்கியது என சுருக்கமாக பார்த்துவிடுவோம்.

முதல் உலகப் போருக்கும், ‘சுதந்திரத்துக்கும்’ இடைப்பட்ட காலத்தில், உலகப் பணவாட்டத்தின் காரணமாக ஏற்பட்ட ஏற்றுமதி சரிவு, பொருளாதர வீழ்ச்சி, 2ம் உலகப்போரின்போது கிட்டத்தட்ட முழுவதுமாக நொடிந்துப்போன கப்பல் போக்குவரத்து,

மும்பை கப்பல் தொழிலாளர் தோழர்களின் போராட்டம், எழுச்சி நினைவுக்கு வருகிறதா? அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் இங்கே நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள்…

போன்ற காரணங்களால், இந்திய வேளாண்மைக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இதை மீட்டெடுப்பதற்கான சூழலியல் மாற்று மற்றும் தற்சார்பு குறித்து, ‘தலைவர்கள்’ ஆராய ஆரம்பித்தார்கள். 1942 – 1946 வரை தடைசெய்யப்பட்டிருந்த ‘மகாத்மா’ காந்தியின் ‘அரிஜன்’ பத்திரிகையில், 1946 – 47ல் வேளாண் பற்றாக்குறையை அரசியல் ரீதியாக எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என பல கட்டுரைகள் வெளியாகின.

உள்ளூர் வளங்களை பயன்படுத்தி எப்படி அதிகமான உணவை உற்பத்தி செய்ய வேண்டும் என்று மீரா பென், குமரப்பா (ரவி சீனிவாஸ் குறிப்பிட்டுள்ளது இவரைத்தான்), பியாரேலால் ஆகியோர் கட்டுரைகளை எழுதினார்கள்.

//ஆனால் ஜே.சி.குமரப்பா போன்ற காந்தியர்கள் அதற்கு முன்பே இந்தியாவில் எத்தகைய வேளாண்மை வேண்டும் என்பதை எழுதியிருந்தனர். குமரப்பா என்ன எழுதினார் என்பது இந்தப் பொய்யர்களுக்கு தெரியுமா.//

என ஆவேசத்துடன் கீ போர்டை தட்டியபடி ரவி கேட்கிறார். கஷ்டம். ரொம்ப ரொம்ப கஷ்டம். குமரப்பா சொன்னது இந்திய வேளாண்மையை அப்படியே பின்பற்ற வேண்டும் என்றுதான். ஆனால், ரவி இதற்கு மாற்றான பசுமைப் புரட்சிக்கு கொடி பிடிக்கிறார்!! முன்னுக்குப் பின் முரண்.

சும்மா, நான்கு பெயர்களை தெரிந்து வைத்துக் கொண்டு ‘எதிர்வினை’ புரியக் கூடாது ரவி.

இந்த சூழலில்தான் சத்தமில்லாமல் அமெரிக்க நிறுவனங்களிலும், மானிய அமைப்புகளிலும் வேளாண்மை வளர்ச்சி குறித்து வேறுவித பார்வை உருவெடுத்துக் கொண்டிருந்தது. அதாவது ஆசிய உற்பத்தி முறைக்கு எதிரான மாற்றுப் பார்வை. இந்தப் பார்வையைத்தான் மூன்றாம் உலக நாடுகள் அனைத்தும் பின்பற்ற வேண்டும் என்ற முடிவுடன் அமெரிக்கா களம் இறங்கியது.

இப்படி வேறு பாதைக்கு உலக வேளாண்மையை கொண்டு செல்ல வேண்டும் என அமெரிக்கா தீர்மானித்ததற்கு காரணம் என்ன தெரியுமா?  கம்யூனிஸம்!

ஆமாம், பசுமைப் புரட்சிக்கு காரணம் தோழர் மாசேதுங் மீது அமெரிக்காவுக்கு இருந்த பயம்தான்!!!!

தொடரும்